நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
தனது ஒவ்வொரு படம் வெளியானதும் இமயமலைக்கு ஆன்மிக பயணம் செல்வதை வழக்கமாக கொண்டவர் ரஜினி. கொரோனா தொற்று காரணமாக 4 ஆண்டுகளாக செல்லவில்லை. அவர் கடைசியாக நடித்த 'ஜெயிலர்' படம் கடந்த 10ம் தேதி வெளியான நிலையில் இந்த முறை இமயமலைக்கு சென்றார்.
கடந்த 9ம் தேதி பெங்களூரு சென்று, அங்கிருந்து டேராடூன் வழியாக இமயமலை சென்றார். பத்ரிநாத், கேதர்நாத், பாபாஜி குகை உள்பட பல இடங்களுக்கு சென்று வழிபட்டார். பல ஆன்மிக குருக்களையும், அரசியல் தலைவர்களையும் சந்தித்தார். தனது 12 நாள் ஆன்மிக பயணத்தை முடித்து கொண்டு நேற்று இரவு ரஜினி சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் ரஜினியை அவரது ரசிகர்கள் மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ‛‛4 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலைக்கு சென்று வந்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. 'ஜெயிலர்' படத்தை மிகப்பெரிய வெற்றி அடைய வைத்த என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கும், உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பட தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர் உள்ளிட்ட அனைத்து படகுழுவினருக்கும் நன்றியையும் மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்,'' என்றார்.
உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது சர்ச்சை ஆகி இருப்பது குறித்து கேட்டபோது, “நட்பு ரீதியான சந்திப்பே தவிர வேறு ஒன்றும் அதில் கிடையாது. சன்னியாசி ஆகட்டும், யோகிகள் ஆகட்டும் அவர்கள் காலில் விழுவது என்னுடைய பழக்கம். அதைத்தான் நான் செய்தேன். பயணத்தின் போது அரசியல் தலைவர்களை நட்பு ரீதியாக சந்தித்தேன். அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை," என்றார்.