என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் : நயன்தாரா வேண்டுகோள் | படுத்தே விட்டானய்யா மொமண்ட் : கமலை கடுமையாக கலாய்த்த நடிகை கஸ்தூரி | இயக்குனராக அடுத்த படத்திற்கு தயாரான தனுஷ் | நாக சைதன்யா படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட நாகார்ஜூனா, வெங்கடேஷ் | உடல் தோற்றம் பற்றிய கமென்ட்டால் அழுது இருக்கேன் - கீர்த்தி பாண்டியன் | அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் | பைட்டர் டீசரில் பிகினி, லிப்லாக்கில் தீபிகா படுகோனே | பைட் கிளப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது | முத்து ரீ-ரிலீஸ் முதல் காட்சியை பார்த்து ரசித்த மீனா | டொவினோ தாமஸ் பட இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட மம்முட்டி பட இயக்குனர் |
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான சூப்பர் ஹிட் படமான திரிஷ்யம் மூலம் முதன்முறையாக நடிகர் மோகன்லாலும், இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் கைகோர்த்தனர். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து திரிஷ்யம் 2, டுவல்த் மேன் மற்றும் ராம் என நான்கு படங்களில் இவர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர். இதில் ராம் படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் பாதியிலேயே நிற்கிறது. மற்ற மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றன. இந்த நிலையில் ஐந்தாவதாக நேரு என்கிற படத்திற்காக இணைந்துள்ளனர் மோகன்லாலும், ஜீத்து ஜோசப்பும்.
மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பில் 33 வது படமாக இது உருவாக இருக்கிறது. நேரு அதாவது உண்மை என்கிற டைட்டிலுடன் நீதியை தேடி என்கிற டேக்லைனுடன் இந்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார் மோகன்லால். மேலும் இந்த போஸ்டரை பார்க்கும்போது இது நீதிமன்றம் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடிகிறது.