மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

தென்னிந்திய சினிமாக்களில் நடித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், சமீபத்தில் கர்நாடகா மாநிலம் சிவ மொக்காவில் உள்ள ஒரு கல்லூரியில், தியேட்டர் வசனம், சினிமா, சமூகம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். ஆனால் கல்லூரிக்கு தொடர்பில்லாத தனியார் நிகழ்ச்சியை எப்படி கல்லூரி வளாக்கத்திற்குள் நடத்தலாம் என்று அதற்கு எதிராக அந்த கல்லூரியை சேர்ந்த சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். அதோடு நடிகர் பிரகாஷ்ராஜ் கல்லூரிக்கு வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

ஆனபோதிலும் மாணவர்களின் எதிர்ப்பை மீறி இந்த நிகழ்ச்சியில் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து அந்த நிகழ்ச்சி முடிந்து பிரகாஷ்ராஜ் அங்கிருந்து வெளியேறியதும், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த மாணவர்கள், அந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கோமியத்தை கொண்டு வந்து தெளித்து சுத்தம் செய்து உள்ளார்கள். அது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
 
           
             
           
             
           
             
           
            