என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் |

சென்னை : நடிகர் அஜித் வழிகாட்டுதல் உடன் செயல்பட்டு வரும் தக்ஷா குழு, இந்திய ராணுவத்திற்கு ட்ரோன் தயாரிக்கும் ஆர்டரை ரூ.165 கோடிக்கு பெற்றுள்ளது.
நடிகர் அஜித் சினிமாவை தாண்டி பைக், கார் ரேஸ், போட்டோகிராபி, துப்பாக்கி சுடுதல் மற்றும் ட்ரோன் தயாரிப்பு போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர். ஏற்கனவே சிறிய ரக ட்ரோன்களை தயாரித்து அசத்தி உள்ளார். இவரது திறமையை கண்டு சென்னை எம்ஐடி-யைச் சேர்ந்த மாணவர்கள் குழு இவர் ஆலோசனை வழங்க தக்ஷா என்ற பெயரில் குழுவாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். ட்ரோன்கள் தயாரிக்கும் பணிகளில் இவர்கள் இறங்கினர். கொரோனா காலக்கட்டத்தில் இவர்கள் உருவாக்கிய ட்ரோன்கள் பல திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டன.

இந்நிலையில் இந்த குழுவினருக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. இந்திய ராணுவத்திற்காக இவர்கள் 200 ட்ரோன்களை தயாரிக்க ஆர்டர் பெற்றுள்ளனர். இதற்காக ரூ.165 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் இவர்கள் தயாரிக்கும் ட்ரோன்களை இந்திய ராணுவத்திற்காக வழங்க உள்ளனர். இந்த ட்ரோன்கள் எல்லை பகுதிகளில் கண்காணிப்பு உள்ளிட்ட பல வகைகளில் பயன்படுத்தப்பட உள்ளன.
அஜித் மற்றும் அவர் ஆலோசனை வழங்கும் இந்த குழுவிற்கு இந்திய ராணுவத்திடமிருந்து ஆர்டர் கிடைத்திருப்பது மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது. அதோடு அஜித் மற்றும் அவர் சார்ந்த தக்ஷா குழுவினருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.