முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
சென்னை : நடிகர் அஜித் வழிகாட்டுதல் உடன் செயல்பட்டு வரும் தக்ஷா குழு, இந்திய ராணுவத்திற்கு ட்ரோன் தயாரிக்கும் ஆர்டரை ரூ.165 கோடிக்கு பெற்றுள்ளது.
நடிகர் அஜித் சினிமாவை தாண்டி பைக், கார் ரேஸ், போட்டோகிராபி, துப்பாக்கி சுடுதல் மற்றும் ட்ரோன் தயாரிப்பு போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர். ஏற்கனவே சிறிய ரக ட்ரோன்களை தயாரித்து அசத்தி உள்ளார். இவரது திறமையை கண்டு சென்னை எம்ஐடி-யைச் சேர்ந்த மாணவர்கள் குழு இவர் ஆலோசனை வழங்க தக்ஷா என்ற பெயரில் குழுவாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். ட்ரோன்கள் தயாரிக்கும் பணிகளில் இவர்கள் இறங்கினர். கொரோனா காலக்கட்டத்தில் இவர்கள் உருவாக்கிய ட்ரோன்கள் பல திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில் இந்த குழுவினருக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. இந்திய ராணுவத்திற்காக இவர்கள் 200 ட்ரோன்களை தயாரிக்க ஆர்டர் பெற்றுள்ளனர். இதற்காக ரூ.165 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் இவர்கள் தயாரிக்கும் ட்ரோன்களை இந்திய ராணுவத்திற்காக வழங்க உள்ளனர். இந்த ட்ரோன்கள் எல்லை பகுதிகளில் கண்காணிப்பு உள்ளிட்ட பல வகைகளில் பயன்படுத்தப்பட உள்ளன.
அஜித் மற்றும் அவர் ஆலோசனை வழங்கும் இந்த குழுவிற்கு இந்திய ராணுவத்திடமிருந்து ஆர்டர் கிடைத்திருப்பது மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது. அதோடு அஜித் மற்றும் அவர் சார்ந்த தக்ஷா குழுவினருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.