கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் | எனக்கு என்ன ஆச்சு ? நஸ்ரியா தன்னிலை விளக்கம் | பிரபாஸ் படப்பிடிப்பில் மிதுன் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட கைமுறிவு | கொச்சியில் புது வீடு கட்டினார் நிமிஷா சஜயன் | 'கூலி, 45' ; ஒரேநாளில் வெளியாகும் உபேந்திராவின் 2 படங்கள் | நடிகை ஜனனி திருமண நிச்சயதார்த்தம் ; விமான பைலட்டை மணக்கிறார் | விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் படம் வருகிற 10-ஆம் தேதி திரைக்கு வருகிறது. அதையடுத்து ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் ரஜினி. இந்த படத்தையடுத்து ஞானவேல் இயக்கும் தனது 170 வது படத்தில் நடிக்கப் போகிறார். ரஜினியுடன், அமிதாப்பச்சன், நானி, பகத்பாசில் என பலர் இப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது கூத்துப்பட்டறையை சார்ந்த பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கயிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த கதாபாத்திரங்களில் புதுமுகங்களை தான் நடிக்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்த ஞானவேல், புதுமுகங்கள் அதிகப்படியான டேக் வாங்கினால் அது ரஜினியையும் கஷ்டப்படுத்தும். இதனால் ஏற்கனவே கூத்து பட்டறையில் பயிற்சி பெற்று பல படங்களில் நடித்த சிறந்த கலைஞர்களை இந்த படத்தில் ரஜினி உடன் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளாராம்.