சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
உடல் வளர்ச்சி குறைபாட்டுடன் பிறந்தவர் மோகன்(60). சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த இவர் சர்க்கஸ் கம்பெனிகளில் பணியாற்றி வந்தார். கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளமான கமலின் நண்பர்களில் ஒருவராக குள்ள மனிதராகவே நடித்தார். அதன் பின்னர் 'நான் கடவுள்', 'அதிசய மனிதர்கள்' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு நின்று போனதும் சென்னையில் இருந்து கிளம்பி பல ஊர்களுக்கு சென்று, கிடைக்கும் வேலையை பார்த்துக் கொண்டு காலத்தை கடத்தி வந்தார். கடைசியாக மதுரை, திருப்பரங்குன்றம் கோவில் பகுதியில் தங்கி பிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 60 வயதான மோகன் பல்வேறு உடல்நல பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதற்கான சிகிக்சை எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் பெரிய ரத வீதியில் ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்தார்.
போலீசார் வந்து உடலை மீட்டு விசாரணையில் இறங்கியபோதுதான் அது மோகன் என்றும், சினிமா துணை நடிகர் என்றும் தெரியவந்தது. விசாரணைக்கு பின் மோகனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.