ரஜினி, கமலை இணைத்து படம் : முயற்சித்த லோகேஷ் | சம்பளத்தை உயர்த்த மாட்டேன் : சசிகுமார் உறுதி | அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி : பார்த்திபன் கலகலப்பு | ராம் சரணுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கிய இங்கிலாந்து ரசிகர்கள் | சந்தான பட சர்ச்சை பாடல்: என்ன பிரச்னை? பாட்டில் அப்படி என்ன இருக்கிறது? | அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்கள் : கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்ட கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் | மகன் படத்தில் பாடுவாரா விஜய்? | திரையுலகில் 50வது ஆண்டு: பாரதரத்னா விருது பெறுவாரா இளையராஜா? |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், யோகி பாபு உட்பட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜெயிலர். அனிருத் இசை அமைத்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் அதிகாலை காட்சியை திரையிடுவதற்கு தமிழகத்தில் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் கர்நாடக மாநிலத்தில் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு வருவதால், அங்கு காலை 6 மணிக்கே ஜெயிலர் படத்தின் முதல் காட்சி திரையிடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழகத்திலும் அதிகாலை முதல் காட்சி திரையிடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஜெயிலர் படக்குழு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இடத்தில் கோரிக்கை வைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.