22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், யோகி பாபு உட்பட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜெயிலர். அனிருத் இசை அமைத்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் அதிகாலை காட்சியை திரையிடுவதற்கு தமிழகத்தில் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் கர்நாடக மாநிலத்தில் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு வருவதால், அங்கு காலை 6 மணிக்கே ஜெயிலர் படத்தின் முதல் காட்சி திரையிடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழகத்திலும் அதிகாலை முதல் காட்சி திரையிடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஜெயிலர் படக்குழு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இடத்தில் கோரிக்கை வைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.