இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
உதயநிதி, வடிவேலு நடித்த மாமன்னன் படத்தை இயக்குவதற்கு முன்பே துருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார் மாரி செல்வராஜ். அதற்காக சில மாதங்களாக துருவ் விக்ரம் கபடி விளையாட்டு பயிற்சியும் எடுத்து வந்தார். ஆனால் திடீரென்று அந்த படத்தை தள்ளி வைத்து விட்டு மாமன்னன் படத்தை தொடங்கினார். இந்நிலையில் தற்போது மீண்டும் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி இருக்கிறார் மாரி செல்வராஜ். ஆகஸ்ட் மாதம் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்க உள்ளது. மேலும், இந்த படம் தமிழக கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த இந்த கபடி வீரர் கணேசன், ஆசிய அளவிலான கபடி விளையாட்டுகளில் பங்கேற்று சாதனை புரிந்ததோடு, மத்திய அரசின் அர்ஜூனா விருதினை பெற்றவர். மேலும் மாரி செல்வராஜ் இயக்கும் இந்த படம் 1990 காலகட்ட பின்னணியில் உருவாகிறது.