அட்லியின் 'ராக்கா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாருக்கான்! | சிவராஜ்குமாரை இயக்கும் எங்கேயும் எப்போதும் சரவணன் | விக்னேஷ் ராஜா நீங்கள் ஜீனியஸ் : தனுஷ் பாராட்டு | தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஜோவிகா! | 4வது 100 கோடியை தொடுமா எல்ஐகே | 1 கோடி இழப்பீடு கேட்டு தமன்னா தொடர்ந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி | 'அரசன்' பார்த்து அதிர்ச்சி அடைந்த தனுஷ் | முடிவுக்கு வரும் 'துரந்தர் 2' வசூல் | 'ஜனநாயகன்' லீக்: 3 முக்கிய குற்றவாளிகள் கைது | ஆங்கிலத்திலும் வெளியாகும் என்னுடைய முதல் படம் 'டாக்ஸிக்' தான் ; நடிகர் யஷ் |

உதயநிதி, வடிவேலு நடித்த மாமன்னன் படத்தை இயக்குவதற்கு முன்பே துருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார் மாரி செல்வராஜ். அதற்காக சில மாதங்களாக துருவ் விக்ரம் கபடி விளையாட்டு பயிற்சியும் எடுத்து வந்தார். ஆனால் திடீரென்று அந்த படத்தை தள்ளி வைத்து விட்டு மாமன்னன் படத்தை தொடங்கினார். இந்நிலையில் தற்போது மீண்டும் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி இருக்கிறார் மாரி செல்வராஜ். ஆகஸ்ட் மாதம் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்க உள்ளது. மேலும், இந்த படம் தமிழக கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த இந்த கபடி வீரர் கணேசன், ஆசிய அளவிலான கபடி விளையாட்டுகளில் பங்கேற்று சாதனை புரிந்ததோடு, மத்திய அரசின் அர்ஜூனா விருதினை பெற்றவர். மேலும் மாரி செல்வராஜ் இயக்கும் இந்த படம் 1990 காலகட்ட பின்னணியில் உருவாகிறது.