கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
தமிழ் சினிமாவில் சில பல ஆண்டுகளுக்கு முன்பு வரை நகைச்சுவை நடிப்பில் கோலோச்சிக் கொண்டிருந்தவர் சந்தானம். டிவியிலிருந்து வந்த சிவகார்த்திகேயன் ஹீரோவாக வெற்றி பெற ஆரம்பித்த பின், அதே டிவியிலிருந்து வந்த சந்தானத்திற்கும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பின் 'தில்லுக்கு துட்டு' படம்தான் அவருக்கு முதல் வெற்றியைத் தந்தது. அதன் பின் வந்த படங்களில் 'தில்லுக்கு துட்டு 2' தான் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. சில படங்கள் சுமாரான வெற்றியைப் பெற்றன. ஆனால், அவர் நடித்து கடைசியாக வெளிவந்த “சபாபதி, குலு குலு, ஏஜன்ட் கண்ணாயிரம்” ஆகிய படங்கள் படுதோல்வியைத் தான் பெற்றது.
அந்தத் தோல்வியிலிருந்து மீள வேண்டும் என்ற நம்பிக்கையில் மீண்டும் தன்னுடைய பழைய பாணியைக் கையிலெடுத்தார். 'தில்லுக்கு துட்டு 3' என வர வேண்டிய படம்தான் 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஆக நாளை வெளியாகிறது. தனது பாணி நகைச்சுவையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதால் கண்டிப்பாக 'மீண்டு ரிட்டர்ன்' ஆகிவிடுவேன் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சந்தானம். அவரது நம்பிக்கை ரசிகர்களின் கையில்தான் உள்ளது.