அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
தெலுங்கில் சில நாட்களுக்கு முன்பு சாய் ராஜேஷ் இயக்கத்தில் ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி சைதான்யா உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த படம் பேபி. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று உலகளவில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது. இந்த நிலையில் பேபி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதில் கதாநாயகியாக நடித்த வைஷ்ணவி சைதான்யா, தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், கீதா ஆர்ட்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சினிமா வட்டாரங்களில் அதிக படங்களில் நடிக்கும் அடுத்த ஸ்ரீ லீலாவாக வைஷ்ணவி வருவார் என பேசப்படுகிறது. இதற்கு முன்பு வைஷ்ணவி தமிழில் அஜித் நடித்த வலிமை படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.