‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” | பான் இந்தியா அளவில் முன்னேறிச் சென்றது தனுஷ் மட்டுமே… | ராதிகா சரத்குமார் கொடுத்த கிறிஸ்துமஸ் 'லன்ச்' விருந்து | தள்ளிப் போகிறதா 'பராசக்தி' தெலுங்கு ரிலீஸ்? | நிலத்தில் உழவு செய்த சல்மான் கான், தோனி |

நடிகை அமலாபாலுக்கு தற்போது சினிமா வாய்ப்புகள் எதுவும் பெரிதாக இல்லை. என்றாலும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்தார். அடிக்கடி கவர்ச்சி படங்களை வெளியிட்டு பெரிய எண்ணிக்கையிலான பாலோயர்ஸ்களை வைத்திருந்தார்.
கடந்த ஆண்டு தனது ராஜஸ்தானிய காதலருடன் புதுச்சேரி ஆரோவில் பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, நில மோசடி உள்ளிட்டவை நீதிமன்றம் வரை சென்றது. இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் இருந்து அமலாபால் ஒதுங்கி இருந்தார்.
தற்போது சிறு இடைவெளிக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் தனது படங்களை வெளியிட்டு “மீண்டும் ஸ்பாட்லைட்டுக்கு வந்து விட்டேன்” என்று குறிப்பிட்டிருகிறார். அவரது இந்த பதிவுக்கு ஒரே நாளில் ஒன்றரை லட்சத்திற்கு அதிகமான லைக்ஸ் குவிந்து உள்ளது. மேலும், 'தலைவி ரிட்டர்ன்ஸ், 'குயின் இஸ் பேக்' போன்ற கமெண்ட்களை ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது பிருத்விராஜுடன் நடித்துள்ள 'ஆடு ஜீவிதம்' படம் மட்டுமே அமலாபாலின் ஒரே நம்பிகையாக உள்ளது. இந்த படத்திற்கும், பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படம் தனது அடுத்த ரவுண்டை துவக்கி வைக்கும் என்ற நம்பிகையில் இருக்கிறார். இதற்காகவே அவர் மீண்டும் தனது இன்ஸ்டாகிராமுக்கு வந்திருக்கிறார்.