சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு | அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெற்றி பெற வாழ்த்திய ரஜினி | ரசிகர்களுடன் குட் பேட் அக்லி படம் பார்த்து ரசித்த ஷாலினி அஜித் | ஹவுஸ் மேட்ஸ் படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன் | சின்னத்திரை டூ வெள்ளித்திரை... தமிழ் பேசும் நடிகைகளுக்கும் வாய்ப்பு : மாறுது சினிமா டிரெண்ட்! | சூர்யா 45 படத்தில் இணைந்த இளம் நடிகை |
நடிகர் சிவக்குமார், அவருடைய மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் அகரம் அறக்கட்டளை மூலம் பல ஏழை மாணவர்களுக்கு கல்வியை கொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் லட்சியத்தில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு, சென்னை சாலிகிராமத்தில் இன்று (ஜூலை 16) அகரம் அறக்கட்டளையில் விழா நடந்தது. இதில் சிவக்குமார், சூர்யா, கார்த்தி பங்கேற்று மாணவ, மாணவிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினர். மேலும், அவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசியதாவது: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் தலை வணங்குகிறேன். மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பது எவ்வளவு கஷ்டம் என்பது தெரியும். அனைவருக்கும் சரியான சமமான கல்வி வழங்க அகரம் அறக்கட்டகளை முயற்சி எடுத்து வருகிறது. இது போன்ற கல்வி உதவிதொகை பெறும் நிகழ்வால் தான் வாழ்க்கை முழுமையடைகிறது. கல்வி மூலவமாக வாழ்க்கையை படியுங்கள், வாழ்க்கை மூலமாக கல்வியை படியுங்கள். வாழ்க்கை முழுவதும் கல்வி தேவை; ஆனால் மார்க் மட்டும் வாழ்க்கையல்ல. சாதி மதத்தை கடந்து வாழ்க்கையை புரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் கார்த்தி பேசுகையில், ‛நடிகர் விஜய் பயிலரங்கம் துவங்கியதில் சந்தோஷம். இது பத்தாது, ஏனென்றால் அவ்வளது தேவை இருக்கிறது. விஜய் அண்ணன் செய்வது மிகவும் சந்தோஷம்' என்றார்.