நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமா எத்தனையோ விசித்திரமான படங்களைப் பார்த்திருக்கிறது. ஆனால், இப்போது விசித்திரமான கமெண்ட்டுகளைத்தான் அதிகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அப்படியான கமெண்ட்டுகளுக்கு அடித்தளமாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. அந்த கமெண்ட்டுகள் புதிதாக வரும் படங்களைப் பற்றித்தான் அதிகம் இருக்கிறது.
ஒரு புதிய படம் வெளிவந்ததும், படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால், இடைவேளைக்குப் பின் மோசமாக இருக்கிறது, மொக்கையாக இருக்கிறது. ஆனால், இடைவேளைக்கு முன் கலகலப்பாக நன்றாக இருக்கிறது என 'பின், முன்' என பிரித்து சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஒட்டுமொத்தமாக படம் நன்றாக இருக்கிறது என்ற கமெண்ட்டுகளை அபூர்வமாகத்தான் கேட்க முடிகிறது.
நேற்று வெளியான 'மாவீரன்' படம் பற்றி வரும் விமர்சனங்களும், ரசிகர்கள் கருத்துக்களும் இதையேதான் எதிரொலிக்கின்றன. இடைவேளை வரை சுவாரசியமாக இருக்கிறது, இடைவேளைக்குப் பின் சரியாக இல்லை, படம் எப்போது முடியும் என யோசிக்க வைக்கிறது என்ற கமெண்ட்டுகள்தான் அதிகம் வருகின்றன.
ஆனால், மூத்த இயக்குனர்களைக் கேட்டால் இடைவேளை வரை ரசிகர்களை அப்படி, இப்படி என ஏதாவது செய்து உட்கார வைத்துவிட்டு, இடைவேளைக்குப் பின் அழுத்தமான கதையைச் சொன்னால் போதும், அந்தப் படம் ஹிட் என்கிறார்கள். இருந்தாலும் இன்றைய இளம் இயக்குனர்கள், இடைவேளைக்குள் ஏதாவது செய்துவிட்டு, இடைவேளைக்குப் பின் திணற ஆரம்பித்துவிடுகிறார்கள் என்று தயாரிப்பாளர்கள் தரப்பிலும் கமெண்ட் கருத்து சொல்கிறார்கள்.