Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெண்கள் பன்முக திறன் கொண்டவர்கள்! நயன்தாரா

12 மார், 2013 - 10:42 IST
எழுத்தின் அளவு:

பெண்கள் பன்முக திறன் கொண்டவர்கள், அவர்களை பரந்தமனம் இல்லாத சின்ன புத்திக்காரர்கள் மட்டுமே மட்டம் தட்டுகிறார்கள், என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். பிரபுதேவாவுடன் காதல் முறிவுக்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், பெண்களால் எல்லாவற்றிலும் ஒப்பிடமுடியாத அளவுக்கு உயர்ந்தவர்களாக முடியும். ஆனாலும் சின்ன புத்தி கொண்டவர்கள், பரந்த மனம் இல்லாதவர்கள் அவர்களை பின்னுக்கு இழுக்கிறார்கள். அவற்றை வென்றெடுத்து சாதிக்க முடியும். ஒரு பெண்ணாக என்னால் எல்லாவற்றையும் நிர்வகிக்க முடியும். சிறந்த குடும்ப தலைவியாக இருக்க முடியும்.

சாதிக்க முடியாது என்று எண்ணுபவர்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணாக நான் சாதித்திருக்கிறேன். நான் செய்யும் நற்பணிகள்பற்றியோ மக்களுக்காக செய்வதுபற்றியோ கூற வரவில்லை. என்னுடைய வேலையை குறிப்பிட்டு சொல்கிறேன். எங்களுக்குள்ள இமேஜ் அல்லது கவர்ச்சியாலோ மற்றவர்களால் கவனிக்கப்படுகிறோம். ஆனால் இதையெல்லாம்விட அதிகம் பெண்களால் சாதிக்க முடியும். பெண்கள் பன்முக திறன் கொண்டவர்கள். அதனால்தான் உலகம் முழுவதும் பெண்களின் அவசியத்தை எல்லா துறையிலும் உணர்ந்திருக்கிறார்கள், என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)