விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் |
பெண்கள் பன்முக திறன் கொண்டவர்கள், அவர்களை பரந்தமனம் இல்லாத சின்ன புத்திக்காரர்கள் மட்டுமே மட்டம் தட்டுகிறார்கள், என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். பிரபுதேவாவுடன் காதல் முறிவுக்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், பெண்களால் எல்லாவற்றிலும் ஒப்பிடமுடியாத அளவுக்கு உயர்ந்தவர்களாக முடியும். ஆனாலும் சின்ன புத்தி கொண்டவர்கள், பரந்த மனம் இல்லாதவர்கள் அவர்களை பின்னுக்கு இழுக்கிறார்கள். அவற்றை வென்றெடுத்து சாதிக்க முடியும். ஒரு பெண்ணாக என்னால் எல்லாவற்றையும் நிர்வகிக்க முடியும். சிறந்த குடும்ப தலைவியாக இருக்க முடியும்.
சாதிக்க முடியாது என்று எண்ணுபவர்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணாக நான் சாதித்திருக்கிறேன். நான் செய்யும் நற்பணிகள்பற்றியோ மக்களுக்காக செய்வதுபற்றியோ கூற வரவில்லை. என்னுடைய வேலையை குறிப்பிட்டு சொல்கிறேன். எங்களுக்குள்ள இமேஜ் அல்லது கவர்ச்சியாலோ மற்றவர்களால் கவனிக்கப்படுகிறோம். ஆனால் இதையெல்லாம்விட அதிகம் பெண்களால் சாதிக்க முடியும். பெண்கள் பன்முக திறன் கொண்டவர்கள். அதனால்தான் உலகம் முழுவதும் பெண்களின் அவசியத்தை எல்லா துறையிலும் உணர்ந்திருக்கிறார்கள், என்று கூறியுள்ளார்.