சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' |
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பசுபதி, பார்வதி, மாளவிகா மோகன் உட்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் தங்கலான். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் பத்து நாட்களில் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் துவங்கும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், தங்கலான் படத்தை உலகத்தரம் வாய்ந்த ஒரு படமாக உருவாக்கி வருகிறோம். விக்ரம் உள்ளிட்ட இப்படத்தில் நடிக்கும் அனைவருமே கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் இந்த படத்தை ஆஸ்கருக்கு எடுத்துச் செல்ல தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.