என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் | கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் பட வில்லன் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனர் சிவாஜியை வைத்து எடுத்த ஒரே படம் | ஓடிப்போனவளா? ஷகிலாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | பைனான்சியல் திரில்லர் படத்தில் பிரியா பவானி சங்கர் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'லியோ'. இப்படத்தின் முதல் சிங்கிளான 'நா ரெடி' பாடல் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வாரம் வெளியானது. அப்பாடல் வெளியாவது குறித்த அறிவிப்பு போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிக்கும்படி இருந்ததால் அதற்கு எதிர்ப்பு எழுந்தது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதற்கு நேரடியாகவே கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அதன்பின் பாடல் வெளியானதும் அதிலுள்ள வரிகள் குடிப்பது பற்றிய வரிகளாகவும், புகை பிடிப்பது பற்றிய வரிகளாகவும் இருப்பதற்கும் எதிர்ப்பு எழுந்தது. “பத்தாது பாட்டில் நா குடிக்க, அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க,” என்ற வரிகளும் “மில்லி உள்ள போனா போதும், கில்லி வெள்ல வருவான்டா,” என்ற வரிகளும், “பத்த வச்சி புகைய விட்டா பவர் கிக்கு,” என்ற வரிகள் இப்போது சர்ச்சையை ஏற்படுததியுள்ளன. இந்த லிரிக் வீடியோ முழுவதுமே விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சிகளே இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து போதைப் பொருள் பயன்பாட்டை மையப்படுத்தியே படங்களை இயக்கி வருகிறார். இதற்கு முன்பு அவர் இயக்கிய “கைதி, மாஸ்டர், விக்ரம்” ஆகிய படங்களின் மையக்கரு போதைப் பொருள் கடத்தல் பற்றியதுதான். இந்த 'லியோ' படத்திலும் அதே போதைப் பொருள் கடத்தல்தான் மையக் கரு என்கிறார்கள். இதைத்தான் ஒரு ரசிகர் கூட்டம் 'எல்சியு' எனக் கொண்டாடி வருகிறது.
போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் இந்தப் பாடல் இருப்பதாக சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார். ஒரு திரைப்படப் பாடல் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க முடிகிறதோ இல்லையோ தணிக்கைத் துறை நடவடிக்கை எடுக்கலாம். இப்படம் சென்சாருக்கு வரும் போது பாடலில் உள்ள சர்ச்சைக்குரிய வரிகளை நீக்கச் சொல்ல வாய்ப்பிருக்கிறது.