சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
‛பத்து தல' படத்தை அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிம்பு. இந்த படத்துக்காக சில போர் பயிற்சிகளை பெறுவதற்காக அவர் லண்டன் சென்றிருக்கிறார். மேலும், இந்த படத்தை அடுத்து சிம்பு நடிக்கும் 49வது படத்தை போர் தொழில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜ் இயக்குவதாக கூறப்படும் நிலையில், அதன் பிறகு சிம்பு நடிக்கும் ஐம்பதாவது படத்தை மணிரத்னம் இயக்குவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தையும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ்தான் தயாரிக்கிறது. இதற்கு முன்பு மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்த சிம்பு, கமலின் 234வது படத்தை மணிரத்னம் இயக்கி முடித்த பிறகு அவரது இயக்கத்தில் மீண்டும் நடிக்க போகிறார். இது சிம்புவின் 50வது படம் என்பதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது.