இன்னும் 4 வாரம் தேவை: ஜனநாயகன் சென்சார் வழக்கில் தணிக்கை வாரியம் வாதம் | சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி ரீ ரிலீஸ் ஆகிறது | 22 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரத்தில் இப்போது கேமியோவாக நடிக்கும் மம்முட்டி | கடைசியாக நடித்த படத்தில் நள்ளிரவு 2 மணிக்கு நடனமாடிய தர்மேந்திரா | இங்கு மட்டுமல்ல சவுதியிலும் 'ஜனநாயகன்' வெளியாவதில் சென்சார் சிக்கல் | தமிழில் கவனம் செலுத்தும் மலையாள நடிகர் அஜு வர்கீஸ் | சிரஞ்சீவி பட இயக்குனருக்கு மோகன்லால் கொடுத்த அதிர்ச்சி | சிவகார்த்திகேயன் திரையிலும், நிஜத்திலும் என் சகோதரர் : அதர்வா நெகிழ்ச்சி | 'ஹேப்பி ராஜ்' படப்பிடிப்பு நிறைவு | 'ஜனநாயகன்' தணிக்கை தாதமம், காரணம் என்ன ? |

கேஜிஎப், கேஜிஎப் 2 படங்களின் மாபெரும் வெற்றிக்கு பின் இந்திய அளவில் கவனிக்கப்படும் நடிகராகி உள்ளார் கன்னட சினிமாவை சேர்ந்த யஷ். இந்த படங்களுக்கு பின் அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதனால் அவரின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இதற்கிடையே நிலேஷ் திவாரி இயக்கத்தில் ஹிந்தியில் ராமாயணத்தை தழுவி ஒரு படம் உருவாக உள்ளது. இதில் ராவணனாக யஷ் நடிப்பதாக செய்தி பரவியது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் நஞ்சனகூடுவில் உள்ள ஸ்ரீகண்டேஸ்வரா கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார் யஷ்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‛‛உழைத்து சம்பாதித்த பணத்தை கொடுத்து படம் பார்க்கிறார்கள் ரசிகர்கள். அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். அதனால் மிகுந்த அக்கறையுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றுவது அவசியம். என் மீதான பொறுப்பு அதிகமாகி உள்ளதால் மிகுந்த கவனமுடன் இருக்கிறேன். என் அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். பாலிவுட் தொடர்பான கேள்விக்கு, வதந்திகளை நம்ப வேண்டாம், நான் எங்கும் செல்லவில்லை'' என்றார்.