ஏவிஎம் சரவணன் படத்தயாரிப்பை நிறுத்தியது ஏன்? | கை கட்டியபடி பேசுவார், வெள்ளை உடைகளை விரும்பி அணிவார்: பணிவுக்கும் உபசரிப்புக்கும் புகழ் பெற்ற ஏவி.எம்.சரவணன் | பிரபலங்கள் பட்டியல் 2025: தமிழ் நடிகர்கள், நடிகைகளுக்கு இடமில்லை… | சாய் பல்லவியால் மறுவாழ்வு பெற்றேன் ; இசையமைப்பாளர் நெகிழ்ச்சி | திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி |

கேஜிஎப், கேஜிஎப் 2 படங்களின் மாபெரும் வெற்றிக்கு பின் இந்திய அளவில் கவனிக்கப்படும் நடிகராகி உள்ளார் கன்னட சினிமாவை சேர்ந்த யஷ். இந்த படங்களுக்கு பின் அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதனால் அவரின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இதற்கிடையே நிலேஷ் திவாரி இயக்கத்தில் ஹிந்தியில் ராமாயணத்தை தழுவி ஒரு படம் உருவாக உள்ளது. இதில் ராவணனாக யஷ் நடிப்பதாக செய்தி பரவியது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் நஞ்சனகூடுவில் உள்ள ஸ்ரீகண்டேஸ்வரா கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார் யஷ்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‛‛உழைத்து சம்பாதித்த பணத்தை கொடுத்து படம் பார்க்கிறார்கள் ரசிகர்கள். அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். அதனால் மிகுந்த அக்கறையுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றுவது அவசியம். என் மீதான பொறுப்பு அதிகமாகி உள்ளதால் மிகுந்த கவனமுடன் இருக்கிறேன். என் அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். பாலிவுட் தொடர்பான கேள்விக்கு, வதந்திகளை நம்ப வேண்டாம், நான் எங்கும் செல்லவில்லை'' என்றார்.