'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை ரகுல் பிரீத் சிங். தற்போது தமிழில் அவர் நடித்த அயலான் படம் விரைவில் வெளியாகிறது. கமலின் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ரகுல் பிரீத் சிங் கலந்து கொண்டார். அதில் உண்மையான காதல் எப்படி இருக்க வேண்டும் என்று கேள்வி அவர் அளித்த பதில், "காதலுக்கு எந்தவித எல்லையும், நிபந்தனைகளும் இருக்காது. நீங்கள் ஒருவரோடு உண்மையான காதலில் இருந்தால் அப்போது நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும்.ஒருவர் மீது ஒருவர் மதிப்பு உடன் இருக்க வேண்டும். ஆனால் ,இந்த காலத்தில் ஒரு சிலர் காதலை தவறாக பயன்படுத்துகின்றனர். எதையோ காதல் என்று நினைத்துக்கொள்கின்றனர். காதலித்தவரை வளரவிடாமல் தனக்கு பிடித்ததை செய்ய கட்டாயப்படுத்துகின்றனர்.அதனால் தான் இந்த காலகட்டத்தில் காதல் உறவுகள் நீண்ட காலம் நிலைக்காமல் முறிந்து விடுகின்றன. காதலுக்குள் பொய்க்கு இடம் இல்லை நல்ல நண்பர்களுக்கு இடையில் எப்படி ஒளிவு மறைவில்லாமல் இருக்கிறோமோ அதே போல் காதலிலும் இருக்க வேண்டும். பொய்யை சொல்வது அதனை மறைக்க முயற்சி செய்வது போன்றவை ஏமாற்றுவதற்கு சமம்".
இவ்வாறு வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.