படத்திலிருந்து நீக்கபட்டது குறித்து வருத்தப்பட்ட மகிமா நம்பியார் | சமூக வலைதள கணக்கை நீக்கிய தனுஷ் பட இயக்குனர் | தனது வீட்டின் பணி பெண்ணிற்கு உதவிய அல்லு அர்ஜுன் | நித்யா மேனனுக்கு விட்டுக் கொடுத்த ஜெயம் ரவி | சிம்பு 48வது படம் : தேசிங்கு பெரியசாமியை வாழ்த்திய ரஜினி | இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது : ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சீறிய சமுத்திரக்கனி | மறைந்த பிரதமர் இந்திரா உடன் உரையாடிய கங்கனா | மாயமான கேரள கப்பலின் பின்னணியில் படம் இயக்கும் ‛2018' பட இயக்குனர் | இயக்குனராக மாறிய ஊர்வசியின் கணவர் | தடைகளை தாண்டி 'துருவ நட்சத்திரம்' வெளிவரும்: கவுதம் மேனன் அறிக்கை |
இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' படம் 2010ம் ஆண்டு வெளிவந்தது. இதில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய், சந்தானம், கருணாஸ், கொச்சின் அனீபா, கலாபவன் மணி உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். ரத்தினவேலு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான 'ரோபோ' படத்தின் இன்ஸ்பிரஷனில் உருவாகி இருந்தது.
இந்த படத்தின் கதை என்னுடையது என்று ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர் வழக்கு தொடர்ந்தார். 1996ம் ஆண்டு 'இனிய உதயம்' என்ற மாதஇதழில் தான் எழுதிய 'திக் திக் தீபிகா' என்கிற கதையைத்தான் ஷங்கர் 'எந்திரன்' படமாக எடுத்துள்ளார் என்று தனது வழக்கு மனுவில் அவர் தெரிவித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கை தற்போது நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 'திக் திக் தீபிகா' கதையும், 'எந்திரன்' கதையும் ஒன்றல்ல, எனவே காப்புரிமை சட்டப்படி இதில் நடவடிக்கை எடுக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்து விட்டது.