அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
'வெண்ணிலா கபடி குழு'வில் தொடங்கி கபடி போட்டியை மையமாக வைத்து பல படங்கள் வெளிவந்து விட்டது. அந்த வரிசையில் வருகிற 23ம் தேதி வெளியாகும் படம் 'கபடி ப்ரோ'. இதனை அஞ்சனா சினிமாஸ் சார்பில் உஷா சதீஷ் தயாரிக்கிறார், சதீஷ் ஜெயராமன் இயக்குகிறார். சுஜன், பிரியா லால், சிங்கம்புலி, சஞ்சய் வெள்ளங்கி, மதுசூதனராவ், ஹானா, மனோபாலா, சண்முக சுந்தரம், மீரா கிருஷ்ணன், அஞ்சலி உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜே.டேனியல் இசை அமைத்துள்ளார், கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் சதீஷ் ஜெயராமன் கூறியதாவது: சின்ன சின்ன தில்லு முல்லுகளை செய்து வாழ்க்கையை ஒட்டி வரும் கபடி வீரன் வீரபாகுவின் கதை. அவனுக்கு பக்க பலமாக அவனது நண்பர்கள் அர்ஜெண்ட் முத்துவும், சக்தியும் உள்ளனர். இவர்கள் மூவரும் 'பாயும் புலி' எனும் கபடி அணி வைத்து அந்த பகுதியின் சாம்பியன்களாக உள்ளனர். இந்நிலையில் வீரபாகுவும் அந்த ஊரின் காவல்துறை அதிகாரி இசக்கி பாண்டியனின் மகள் அபிராமியும் காதல் கொள்கின்றனர். இதனால் இசக்கி பாண்டியனின் கோபத்துக்கு ஆளாகிறான். பின்பு நடந்தது என்ன ..? கபடி போட்டியிலும் காதலிலும் வீரபாகு வென்றானா என்பதே கதை. என்றார்.