உண்மை எப்போதும் வெல்லும் : ஆர்த்தி பதிவு; குஷ்பு ஆதரவு | விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி | என் மனைவியை காப்பாற்றுங்க : முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை வேண்டுகோள் | விவாகரத்து வரை சினிமாவிற்கு முழுக்கு, என் குடும்பத்தை கெடுத்தவர் மூன்றெழுத்து நடிகை : ரவி மோகன் கண்ணீர் பேட்டி | 'ஜனநாயகன்' படத்தை கசிய விட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது | ஒன்றிணைந்து பேசுவோம் : திரையுலகினருக்கு கமல்ஹாசன் அழைப்பு | ரவி மோகனை பிரிந்தார் கெனிஷா : சென்னையை விட்டும் வெளியேறினார் | தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா |

'வாலி, குஷி, நியூ, அன்பே ஆருயிரே' என சில பரபரப்பான படங்களைக் கொடுத்த எஸ்ஜே சூர்யா தமிழில் அவர் இயக்கிய மூன்றாவது படமான 'நியூ' படத்தில் கதாநாயகனாகவும் அறிமுகமானார். அதன்பின் சில பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும், பெரிய அளவில் வெற்றியைப் பெறாமல் இருந்தார். பின்னர் குணச்சித்திர கதாபாத்திரத்திலும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்க ஆரம்பித்தார்.
2019ல் வெளிவந்த 'மான்ஸ்டர்' படம் அவருக்கு கதாநாயகனாக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதன் பின் அவர் நடித்து மிகத் தாமதமாக வெளிவந்த 'நெஞ்சம் மறப்பதில்லை' தோல்வியைத் தழுவியது. கடந்த வருடம் வெளிவந்த 'கடமையை செய்' படம் வந்த தடம் தெரியாமல் போனது. ஆனாலும், 'மாநாடு' படங்கள், 'வதந்தி' வெப் தொடர் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.
நாளை அவர் கதாநாயகனாக நடித்துள்ள 'பொம்மை' படம் வெளியாக உள்ளது. 'மான்ஸ்டர்' படத்திற்குப் பிறகு மீண்டும் பிரியா பவானி சங்கருடன் இணைந்து நடித்துள்ளார். சில தரமான படங்களைக் கொடுத்த ராதாமோகன் இயக்கியுள்ளார். தனி கதாநாயகனாக பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் எஸ்ஜே சூர்யா. அவரது ஆசையை 'பொம்மை' நிறைவேற்றித் தருமா என்று நாளை தெரிந்துவிடும்.
இப்படத்திற்குப் பிறகு 'மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 'இந்தியன் 2' படத்திலும் நடித்திருக்கிறார் என்று செய்திகள் வந்துள்ளன.