‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
சின்னத்திரையில் ஒருகாலத்தில் மோஸ்ட் பேவரைட் ஜோடி என்றால் அது சரவணன் மீனாட்சியாக நடித்த மிர்ச்சி செந்திலும், ஸ்ரீஜாவும் தான். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அண்மையில் அவர்கள் வாழ்வில் மகிழ்வூட்டும் விதமாக குழந்தை செல்வமும் கிடைத்தது. இந்நிலையில், சீரியல் நடிகர்கள், நடிகைகளுக்கு இடையே தொடர்ச்சியாக பிரச்னையாக ஏற்பட்டு வருவது குறித்து மனம் திறந்துள்ள மிர்ச்சி செந்தில், சீரியல் நடிகைகளை திருமணம் செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து மிர்ச்சி செந்தில் கூறியதிலிருந்து, 'பொதுவாக சீரியலில் நடிக்கும் போது அந்த கதாபாத்திரம் போலத்தான் நிஜ கேரக்டரும் இருக்குமென நடிப்பவர்களும் நினைத்து விடுகிறார்கள். ஆனால், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அவர்கள் சுயரூபம் தெரியவர பிரச்னை ஆரம்பமாகிறது. இதனால் தான் சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்கள் டைவர்ஸ் செய்துவிடுகிறார்கள்.
நானும் கூட அப்படித்தான் ஸ்ரீஜாவை சீரியலில் வரும் மீனாட்சியாக பார்த்துவிட்டேன். பின்பு தான் புரிந்தது நான் மீனாட்சியை கல்யாணம் பண்ணல ஸ்ரீஜாவை கல்யாணம் பண்ணியிருக்கிறேன் என்று. சீரியல் ஸ்ரீஜா வேறு, நிஜ ஸ்ரீஜா வேறு. திருமணத்துக்கு பிறகு வேறுவிதமாக வாழ்க்கை அமைந்தாலும் காதலின் மகத்துவம் புரிந்தவர்களுக்கு சகிப்புத்தன்மை இருக்க வேண்டும்' என்று அட்வைஸ் செய்வது போல் கூறியுள்ளார்.