பிளாஷ்பேக்: லட்ச ரூபாய் ஊதியம் பெற்ற முதல் பெண் திரைக்கலைஞர், ஆண் வேடமேற்று நடித்திருந்த “பக்த நந்தனார்” | தம்பி வருகையால் நடிப்பில் கவனம் செலுத்தும் அண்ணன் | ஒரு திரைப்படம் வாழ்க்கையை மாற்றியது: சொல்கிறார் இஸ்மத்பானு | பிளாஷ்பேக் : 'விடாமுயற்சி'க்கு முன்னோடி 'கருடா சௌவுக்யமா' | பிளாஷ்பேக் : முதன் முறையாக ஒரே படத்திற்கு மூன்று கிளைமாக்ஸ் | சமந்தா விவாகரத்து விஷயத்தில் என்னை குற்றவாளியாக பார்க்காதீர்கள்? : நாகசைதன்யா ஆதங்கம் | மசாலா கம்பெனி ஓனர் டூ விருது நடிகர் ! ரவிச்சந்திரனின் வாழ்க்கை பயணம் | கணவர் நேத்ரன் குறித்து மனம் திறந்த தீபா | அஜித்தின் விடாமுயற்சியை முந்திய தண்டேல்! | பிப். 11ல் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பட இசை வெளியீட்டு விழா! |
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டில் மோகன்லால், மீனா நடித்து வெளிவந்த திரைப்படம் 'த்ரிஷ்யம்'. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டில் 'த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம்' நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படமும் தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. சமீபத்தில் த்ரிஷ்யம் படத்தை ஆங்கிலம், கொரியா உட்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் ஆகி வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் 'த்ரிஷ்யம்' படத்தின் மூன்றாம் பாகத்துக்கான திரைக்கதை பணிகளில் ஜித்து ஜோசப் ஈடுபட்டு வருகிறார். இதுதான் த்ரிஷ்யம் படத்தின் இறுதி பாகம் என்கிறார்கள். ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் கொடுக்கும் விதமாக இந்த படத்தை மலையாளத்தில் மோகன்லால் நடிக்க ,ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிக்க இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு துவங்கி ஒரே தேதியில் படத்தை வெளியிடவும் படக்குழுவினர்கள் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.