கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
சண்டை இயக்குனர்கள் படம் இயக்குவது ஒன்றும் புதிதில்லை. ஏற்கெனவே கனல் கண்ணன், ஜாக்குவார் தங்கம், பெப்சி விஜயன் உள்ளிட்ட பலர் படம் இயக்கி இருக்கிறார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் அனல் அரசு. முன்னணி சண்டை இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றிய அனல் அரசு 2004ம் ஆண்டு 'அருள்' படத்தின் மூலம் சண்டை இயக்குனர் ஆனார். அதன்பிறகு 100க்கும் மேற்பட்ட படங்களில் சண்டை இயக்குனராக பணியாற்றினார். சிங்ககுட்டி, ராஜபாட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் உள்ளார். அடுத்து அவர் இயக்குனர் ஆகிறார். தற்போது படத்தின் பணிகளை துவங்கி உள்ளார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் படமாக இது உருவாகிறது. இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வை தற்போது நடத்தி வருகிறார். வருகிற 16ம் தேதி ஏவிஎம் ஸ்டூடியோவில் நடிகர், நடிகை தேர்வு நடக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.