கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ. வசந்த மாளிகை படத்தின் மூலம் புகழின் உச்சியை தொட்டவர். எம்.ஜி.ஆருடன் கண்ணன் என் காதலன், ஊருக்கு உழைப்பவன், தலைவன் படங்களில் நடித்தார். சிவாஜியுடன் வசந்த மாளிகை, உயர்ந்த மனிதன், நிறைகுடம், குலமா குணமா, சிவகாமியின் செல்வன், வாணி ராணி, ரோஜாவின் ராஜா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 74 வயதாகும் வாணிஸ்ரீ 1978ம் ஆண்டு முதல் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
ஏற்கெனவே பல விருதுகளை பெற்றுள்ள வாணிஸ்ரீக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள காந்தி தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிகர்நிலைப்பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. இந்த பல்கலைகழகத்தின் 14வது பட்டமளிப்பு விழாவில் இந்த பட்டம் வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் வீரேந்தர் சிங் சவுகான் வழங்கி கவுரவித்தார்.