2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ. வசந்த மாளிகை படத்தின் மூலம் புகழின் உச்சியை தொட்டவர். எம்.ஜி.ஆருடன் கண்ணன் என் காதலன், ஊருக்கு உழைப்பவன், தலைவன் படங்களில் நடித்தார். சிவாஜியுடன் வசந்த மாளிகை, உயர்ந்த மனிதன், நிறைகுடம், குலமா குணமா, சிவகாமியின் செல்வன், வாணி ராணி, ரோஜாவின் ராஜா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 74 வயதாகும் வாணிஸ்ரீ 1978ம் ஆண்டு முதல் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
ஏற்கெனவே பல விருதுகளை பெற்றுள்ள வாணிஸ்ரீக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள காந்தி தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிகர்நிலைப்பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. இந்த பல்கலைகழகத்தின் 14வது பட்டமளிப்பு விழாவில் இந்த பட்டம் வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் வீரேந்தர் சிங் சவுகான் வழங்கி கவுரவித்தார்.