சூர்யா படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் | இப்போதும் நான் தான் வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் : பஹத் பாசில் | 'கருடன்' படத்திற்கு வியாபார வட்டத்தில் வரவேற்பு | அக்கா வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா? | 'ஸ்டார்' படம் முதல் நாள் வசூல் எவ்வளவு ? | 'பாகுபலி 3' போன்று 'கேஜிஎப் 3' பற்றியும் வெளியான புதிய தகவல் | தெலுங்கு படங்களில் நடிப்பதில் உள்ள சங்கடம் இதுதான் : சம்யுக்தா | என்டிஆருக்கு பாரதரத்னா : சிரஞ்சீவி விருப்பம் | 'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய் | மே 31ல் திரைக்கு வரும் கருடன் திரைப்படம் |
நாட்டுப்புற பாடகர் அந்தோணிதாசன். சின்னத்திரை மூலம் நாடறிந்த அவர், பின்னர் சினிமாவில் பாடகர் ஆனார். 'சூதுகவ்வும்', 'காக்கி சட்டை', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'குக்கூ', 'ரோமியோ ஜூலியட்', 'சிகரம் தொடு', 'ஜிகர்தண்டா', 'ஆம்பள', 'தானா சேர்ந்த கூட்டம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட படங்களின் பாடல்கள் உள்பட, மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் 378 பாடல்கள் பாடி உள்ளார்.'எம்.ஜி.ஆர் மகன்', 'அம்பு நாடு ஒம்பது குப்பம்' ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
சில படங்களில் பாடல் காட்சியிலும் சிறு சிறு வேடங்களிலும் நடித்துள்ள அந்தோணிதாசன் தற்போது 'தல போச்சே' என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதுதவிர 'இடி முழக்கம்', 'வைரி' ஆகிய படங்களிலும் நடிக்கிறார். 'ஆசை மச்சான்' என்ற இசை ஆல்பத்தை சமீபத்தில் வெளியிட்டு உள்ளார். அடுத்து சுதந்திர தினத்தில் வெளியிட 'வந்தே மாதரம்' என்ற பாடல் ஆல்பத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் பாடல் ஆல்பத்துக்கான படப்பிடிப்பை ஐவகை நிலங்களில் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.