சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

நாட்டுப்புற பாடகர் அந்தோணிதாசன். சின்னத்திரை மூலம் நாடறிந்த அவர், பின்னர் சினிமாவில் பாடகர் ஆனார். 'சூதுகவ்வும்', 'காக்கி சட்டை', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'குக்கூ', 'ரோமியோ ஜூலியட்', 'சிகரம் தொடு', 'ஜிகர்தண்டா', 'ஆம்பள', 'தானா சேர்ந்த கூட்டம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட படங்களின் பாடல்கள் உள்பட, மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் 378 பாடல்கள் பாடி உள்ளார்.'எம்.ஜி.ஆர் மகன்', 'அம்பு நாடு ஒம்பது குப்பம்' ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
சில படங்களில் பாடல் காட்சியிலும் சிறு சிறு வேடங்களிலும் நடித்துள்ள அந்தோணிதாசன் தற்போது 'தல போச்சே' என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதுதவிர 'இடி முழக்கம்', 'வைரி' ஆகிய படங்களிலும் நடிக்கிறார். 'ஆசை மச்சான்' என்ற இசை ஆல்பத்தை சமீபத்தில் வெளியிட்டு உள்ளார். அடுத்து சுதந்திர தினத்தில் வெளியிட 'வந்தே மாதரம்' என்ற பாடல் ஆல்பத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் பாடல் ஆல்பத்துக்கான படப்பிடிப்பை ஐவகை நிலங்களில் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.




