'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடிக்கு திருமணம் ஆகி இன்றுடன் ஓராண்டு முடிந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் தங்களது குழந்தைகளான உயிர் மற்றும் உலகத்துடன் ஒரு போட்டோ சூட் நடத்தி மகிழ்ச்சியை கொண்டாடி உள்ளார்கள்.
அந்த போட்டோக்களை பகிர்ந்து விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பதிவில், என் உயிரின் ஆதாரம் நீங்கள் தானே. கடந்த ஓராண்டு ஏற்ற இறக்கம், பின்னடைவுகள், சோதனைகள் இருந்தாலும் அதிகப்படியான அன்பும் பாசமும் கொண்ட குடும்பத்தை பார்க்க வீட்டிற்கு வருவது நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் இருந்தது. அடைய விரும்பும் இலக்குகளை நோக்கி ஓடுவதற்கான அனைத்து ஆற்றலையும் குடும்பம் அளிக்கிறது. சிறந்த மனிதர்களால் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். ஒரு நல்ல வாழ்க்கையை கொடுக்க பாடுபடுவது தான் என் போன்றவர்களுக்கு தேவையான ஊக்கம்'' என்று மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் பதிவிட்டு இருக்கிறார் .