'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமான நடிகர் சபீர். அதன் பிறகு திரிஷா நடித்துள்ள தி ரோட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது. இதையடுத்து, விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் சபீர் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு பர்த்மார்க் என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் நாயகியாக மிர்னா நடிக்கிறார். தற்போது இவர் ரஜினியின் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பிஆர் வரலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்
படம் பற்றி இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் கூறும்போது, 'பர்த்மார்க்' கதை ஒரு மிஸ்ட்ரி - டிராமாவாக இரண்டு முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் கதை. இதில், டேனியல் (அ) டேனியாக ஷபீர் கல்லாரக்கல் மற்றும் ஜெனிபராக மிர்னா நடிக்கிறார். இந்த கதை 90களில் நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் சில மர்மங்கள் மற்றும் சஸ்பென்ஸ் உள்ளது. ஆனால், அதைவிட எமோஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.
குழந்தை பிறக்கும் செயல்முறை ஆண்கள் நினைப்பது போல் எளிதானது அல்ல. உடல்ரீதியான சவால்கள் தாண்டி மனரீதியாக பெண்கள் அனுபவிக்கும் மன உளைச்சல்கள் குறித்தும் பேசப்பட வேண்டும். இது போன்றதொரு காலக்கட்டத்தில் தன் மனைவியுடன் கணவன் வரும்போது அவன் மீண்டும் பிறக்கிறான். மேலும், இது தன் தாய் மீதும் பெண்கள் மீதும் மரியாதையை அவனுக்கு ஏற்படுத்துகிறது" என்றார்.




