அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் | தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் |
பழம்பெரும் பாலிவுட் நடிகர் நசுருதீன் ஷா. தற்போதும் பிசியாக நடித்து வருகிறார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு பரபரப்பு கிளப்புவார். அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் விருதுகள் குறித்து கருத்து கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:
தற்போது சினிமா துறையில் இருக்கும் நடிகர்களில் ஒருவரை தேர்வு செய்து அவரை இந்த ஆண்டின் சிறந்த நடிகர் என்று யாரோ அறிவிப்பது எந்த அளவுக்கு சரியானது? என்று தெரியவில்லை. நடிப்புக்கு என்ன அளவுகோல் வைத்திருக்கிறார்கள் என்றும் புரியவில்லை. விருது கொடுப்பவர்களுக்கு நடிப்பு பற்றி என்ன தெரியும் என்றும் தெரியவில்லை. விருதுகளைப் பார்த்து நான் பூரித்துப் போக மாட்டேன். சமீபத்தில் எனக்கு அறிவித்த இரண்டு விருதுகளை வாங்கிக் கொள்ளகூட நான் செல்லவில்லை. ஆரம்பத்தில் விருதுகள் வந்தபோது மிகவும் மகிழ்ந்தேன். அதன் பிறகு விருதுகள் எப்படி வருகின்றன என்பது தெரிந்ததும் அவற்றின் மீது எனக்கு இருந்த ஆர்வம் போய்விட்டது.
ஏதேதோ பெயர்களால் விருதுகளை கொடுக்கிறார்கள். அவற்றால் எனக்கொன்றும் பெருமையாக இல்லை. எனக்கு நிறைய விருதுகள் வந்துள்ளன. ஒருவேளை நான் பண்ணை வீடு கட்டிக் கொண்டால் அதில் பாத்ரூம்களுக்கு கைப்பிடியாக இந்த விருதுகளை வைத்துக் கொள்வேன். நான் ஜனாதிபதி கையால் பெற்ற பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளைப் பெற்றபோது மட்டும் மிகவும் சந்தோஷப்பட்டேன்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.