20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
நடிகர் குரு சோமசுந்தரம் குணசித்திர நடிகராக தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக மலையாளத்தில் மின்னல் முரளி படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். ஒரு சில வருடங்களுக்கு முன்பு அவர் 'ஜோக்கர்' படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் கதையின் நாயகனாக ஒரு படத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது; " அடுத்து ஒரு புதிய படத்தில் நான் கதாநாயகனாக நடிக்கிறேன். இயக்குனர் தினகரன் இயக்கும் இந்த படத்தில் எனக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா நடராஜன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்.
இது அல்லாமல், மலையாளத்தில் மோகன்லால் இயக்கியுள்ள 'பரோஸ்' படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளேன். தமிழில் 'இந்தியன் 2' படத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். இப்பொழுது மொழியை கடந்தது சினிமா மற்ற மொழி பார்வையாளர்களுக்காக அந்தந்த மொழி நடிகர்கள் தேவைப்படுவது கலைஞர்களுக்கு நல்லது" என்று இவ்வாறு குரு சோமசுந்தரம் கூறினார்.