'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த ஜூன் இரண்டாம் தேதி முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இத்னானி நடிப்பில் உருவான ‛காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படம் திரைக்கு வந்தது. கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படம் முதல் நாளில் 3 கோடி வசூலித்த நிலையில், இரண்டாவது நாளில் உலக அளவில் 4.5 கோடி வசூலித்துள்ளது. அதேபோல், ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான வீரன் திரைப்படம் முதல் நாளில் 3.5 கோடி வசூலித்த நிலையில், இரண்டாவது நாளில் 5.5 கோடி வசூலித்துள்ளது.
அந்த வகையில் ஆர்யாவின் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தை விட ஆதியின் வீரன் படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு கோடி அதிகமாக வசூலித்து முதலிடம் பிடித்திருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முந்தைய நாட்களை விட இன்று இந்த இரண்டு படங்களுமே அதிகமாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.