விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமண ஏற்படுகள் தீவிரம் | தெலங்கானா : டிக்கெட் கட்டண உயர்வுக்கு 90 நாள் விதி | 'இளையராஜா' பயோபிக் இந்த வருடமாவது ஆரம்பமாகுமா ? | 'ஜனநாயகன்' வழக்கு விவகாரம் : அடுத்து என்ன நடக்கலாம்? | மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி |

கடந்த ஜூன் இரண்டாம் தேதி முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இத்னானி நடிப்பில் உருவான ‛காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படம் திரைக்கு வந்தது. கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படம் முதல் நாளில் 3 கோடி வசூலித்த நிலையில், இரண்டாவது நாளில் உலக அளவில் 4.5 கோடி வசூலித்துள்ளது. அதேபோல், ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான வீரன் திரைப்படம் முதல் நாளில் 3.5 கோடி வசூலித்த நிலையில், இரண்டாவது நாளில் 5.5 கோடி வசூலித்துள்ளது.
அந்த வகையில் ஆர்யாவின் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தை விட ஆதியின் வீரன் படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு கோடி அதிகமாக வசூலித்து முதலிடம் பிடித்திருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முந்தைய நாட்களை விட இன்று இந்த இரண்டு படங்களுமே அதிகமாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




