இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இயக்குனர் ஜூயிட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ், குச்சக்க கோபன்,அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த திரைப்படம் 2018. 2018ல் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை காவ்யா பிலிம் கம்பெனி மற்றும் பிகே பிரைம் புரொடக்சன்ஸ் இணைத்து தயாரித்துள்ளனர். ஏற்கனவே இப்படம் உலகளவில் ரூ.160 கோடிக்கு மேல் வசூலித்து மலையாள சினிமாவில் அதிக வசூல் பெற்ற படமாக மாறியுள்ளது.
இந்த நிலையில் மற்றொரு புதிய சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது. இந்த படம் கேரளா மாநிலத்தில் மட்டும் ரூ.85 கோடியை கடந்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 7 வருடங்களாக ரூ.84 கோடி வசூலித்த புலிமுருகன் படத்தின் வசூலை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது 2018 திரைப்படம்.