ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

இயக்குனர் ஜூயிட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ், குச்சக்க கோபன்,அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த திரைப்படம் 2018. 2018ல் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை காவ்யா பிலிம் கம்பெனி மற்றும் பிகே பிரைம் புரொடக்சன்ஸ் இணைத்து தயாரித்துள்ளனர். ஏற்கனவே இப்படம் உலகளவில் ரூ.160 கோடிக்கு மேல் வசூலித்து மலையாள சினிமாவில் அதிக வசூல் பெற்ற படமாக மாறியுள்ளது.
இந்த நிலையில் மற்றொரு புதிய சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது. இந்த படம் கேரளா மாநிலத்தில் மட்டும் ரூ.85 கோடியை கடந்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 7 வருடங்களாக ரூ.84 கோடி வசூலித்த புலிமுருகன் படத்தின் வசூலை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது 2018 திரைப்படம்.