நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

இயக்குனர் ஜூயிட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ், குச்சக்க கோபன்,அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த திரைப்படம் 2018. 2018ல் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை காவ்யா பிலிம் கம்பெனி மற்றும் பிகே பிரைம் புரொடக்சன்ஸ் இணைத்து தயாரித்துள்ளனர். ஏற்கனவே இப்படம் உலகளவில் ரூ.160 கோடிக்கு மேல் வசூலித்து மலையாள சினிமாவில் அதிக வசூல் பெற்ற படமாக மாறியுள்ளது.
இந்த நிலையில் மற்றொரு புதிய சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது. இந்த படம் கேரளா மாநிலத்தில் மட்டும் ரூ.85 கோடியை கடந்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 7 வருடங்களாக ரூ.84 கோடி வசூலித்த புலிமுருகன் படத்தின் வசூலை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது 2018 திரைப்படம்.