ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படம் குறித்து புதிய தகவல் இதோ! |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தி கேரளா ஸ்டோரி என்கிற படம் வெளியாகி இந்தியா முழுவதிலும் பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பியது. இந்த படத்திற்கு சில இடங்களில் எதிர்ப்பு எழுந்தாலும் திரையிட தடை விதிக்கப்பட்டாலும், அதையெல்லாம் தாண்டி கிட்டத்தட்ட 200 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய லாபம் ஈட்டி உள்ளது. அதுமட்டுமல்ல இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த அதா ஷர்மா என்பவருக்கும் மிகப்பெரிய புகழ் வெளிச்சத்தை பெற்றுத் தந்துள்ளது.
இதை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வரும் அதா ஷர்மா சோசியல் மீடியாவிலும் ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடி வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “கேரள ஸ்டோரி படம் வருவதற்கு முன் பலரும் எனது மூக்கை அறுவை சிகிச்சை செய்து மாற்றிக் கொள்ளும்படி அட்வைஸ் செய்து வந்தனர். ஆனால் கேரளா ஸ்டோரி படம் வெளியான பிறகு பலரும் எனது மூக்கு நன்றாக இருக்கின்றது என்று பாராட்டி வருகின்றனர். அதனால் எனக்கு இப்போது அப்படி அறுவை சிகிச்சை செய்வதற்கான தேவையும் இல்லை.. நேரமும் இல்லை” என்று கூறியுள்ளார்.
மேலும் அவரது முன்னாள் பாய் பிரண்டுகள் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூறும்போது, “அவர்கள் யாரும் என்னை அழைக்க மாட்டார்கள். நான்தான் அவர்களை அழைப்பேன். அப்படி அவர்களை அழைத்து பேசுவதற்கு ஆல்கஹால் அருந்தி இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. எனக்கு ஒரு ஸ்பூன் இருமல் டானிக்கே போதும் அவர்களை அழைப்பதற்கு” என்று கூறியுள்ளார்.