மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகர் ரஜினியின் அண்ணன் சத்ய நாராயணா. ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ரஜினியை விட அதிகம் பேசி வந்தவர் இவர். ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்த பிறகு அரசியல் வேண்டாம் என்று தடுத்தவரும் இவர்தான். இதை தொடர்ந்து ரஜினி மருத்துவர்களின் ஆலோசனைப்படியும், நலம் விரும்பிகளின் வேண்டுகோள்படியும் நான் அரசியலுக்கு வரவில்லை என்று முறைப்படி அறிவித்து விட்டார்.
என்றாலும் ரஜினி மனம் மாறி என்றாவது மீண்டும் அரசியலுக்கு வரலாம் என்று அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ரஜினி இனி அரசியலுக்கு வந்தாலும் பலன் இல்லை என்று அவரது அண்ணன் சத்ய நாராயணன் கூறியிருக்கிறார்.
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்த அவர் வழிபாடு முடிந்து திரும்பியதும் நிருபர்களிடையே பேசினார். அப்போது ரஜினி அரசியலுக்கு வரும் வாய்ப்பு குறித்து கேட்டபோது “ரஜினியின் ஜெயிலர், லால் சலாம் திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. கடவுளின் அருளால் அவர் நீண்ட காலம் நலமாக இருக்க வேண்டும். ரஜினி இனி அரசியலுக்கு வரமாட்டார். அவருக்கு வயதாகிவிட்டது. அவர் இனி அரசியலுக்கு வந்தாலும் பிரயோஜனம் இல்லை. யாருக்கும் ஆதரவு அளிக்கவும் வாய்ப்பில்லை" என்றார்.