‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் | இனி ஹீரோ தான்: நடிகர் சூரி 'பளீச்' | பிளாஷ்பேக்: சர்வதேச விருதினை வென்றெடுத்த முதல் தமிழ் திரைப்படம் “வீரபாண்டிய கட்டபொம்மன்” | ஜுன் மாதத்தில் 4 பான் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் | 'விக்ரம்' டிரைலர் சாதனையை முறியடித்த 'தக் லைப்' டிரைலர் | நயன்தாரா நடிப்பது பற்றிய வீடியோ, 'இவ்ளோ சுமாரா' எடுத்திருக்க வேண்டுமா? | ஆட்டுக்கார அலமேலு, முத்து, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் - ஞாயிறு திரைப்படங்கள் | தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? |
நடிகர் ரஜினியின் அண்ணன் சத்ய நாராயணா. ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ரஜினியை விட அதிகம் பேசி வந்தவர் இவர். ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்த பிறகு அரசியல் வேண்டாம் என்று தடுத்தவரும் இவர்தான். இதை தொடர்ந்து ரஜினி மருத்துவர்களின் ஆலோசனைப்படியும், நலம் விரும்பிகளின் வேண்டுகோள்படியும் நான் அரசியலுக்கு வரவில்லை என்று முறைப்படி அறிவித்து விட்டார்.
என்றாலும் ரஜினி மனம் மாறி என்றாவது மீண்டும் அரசியலுக்கு வரலாம் என்று அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ரஜினி இனி அரசியலுக்கு வந்தாலும் பலன் இல்லை என்று அவரது அண்ணன் சத்ய நாராயணன் கூறியிருக்கிறார்.
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்த அவர் வழிபாடு முடிந்து திரும்பியதும் நிருபர்களிடையே பேசினார். அப்போது ரஜினி அரசியலுக்கு வரும் வாய்ப்பு குறித்து கேட்டபோது “ரஜினியின் ஜெயிலர், லால் சலாம் திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. கடவுளின் அருளால் அவர் நீண்ட காலம் நலமாக இருக்க வேண்டும். ரஜினி இனி அரசியலுக்கு வரமாட்டார். அவருக்கு வயதாகிவிட்டது. அவர் இனி அரசியலுக்கு வந்தாலும் பிரயோஜனம் இல்லை. யாருக்கும் ஆதரவு அளிக்கவும் வாய்ப்பில்லை" என்றார்.