மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? | அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? | மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி | ஹீரோ ஆனார் ராம்கோபால் வர்மா | தர்மேந்திரா பிறந்தநாளில் ரசிகர்களின் பார்வைக்காக பண்ணை வீடு திறப்பு | தாயின் கருவில் இருந்தபோதே கேட்ட ஸ்லோகம் அது : பாலகிருஷ்ணா தகவல் | கேரளாவில் பம்பாய் பட 30ம் ஆண்டு கொண்டாட்டம் : மணிரத்னம் கலந்து கொள்கிறார் | சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு |

துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. அந்த படத்தை பார்த்த ரஜினிகாந்த் அவரை பாராட்டியதோடு, தனக்கும் ஒரு கதை ரெடி பண்ணுமாறு தேசிங்கு பெரியசாமியிடம் கூறியிருந்தார். இதன் காரணமாக அடுத்தபடியாக ரஜினி நடிக்கும் படத்தை அவர் தான் இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் சொன்ன கதை ரஜினிக்கு திருப்தி அளிக்கவில்லை. அதனால் ரஜினிக்கு ரெடி பண்ணிய அதே கதையை சிம்புவிடம் சொல்லி ஓகே செய்திருக்கிறார் தேசிங்கு பெரியசாமி. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் போர் வீரன் வேடத்தில் நடிக்கும் சிம்பு, அதற்கு தேவையான பயிற்சிகளை பெறுவதற்காக லண்டன் செல்லப் போகிறார். ஒரு மாதம் அங்கு தங்கி பயிற்சி பெற்று விட்டு அவர் சென்னை திரும்பியதும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளது.




