175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. அந்த படத்தை பார்த்த ரஜினிகாந்த் அவரை பாராட்டியதோடு, தனக்கும் ஒரு கதை ரெடி பண்ணுமாறு தேசிங்கு பெரியசாமியிடம் கூறியிருந்தார். இதன் காரணமாக அடுத்தபடியாக ரஜினி நடிக்கும் படத்தை அவர் தான் இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் சொன்ன கதை ரஜினிக்கு திருப்தி அளிக்கவில்லை. அதனால் ரஜினிக்கு ரெடி பண்ணிய அதே கதையை சிம்புவிடம் சொல்லி ஓகே செய்திருக்கிறார் தேசிங்கு பெரியசாமி. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் போர் வீரன் வேடத்தில் நடிக்கும் சிம்பு, அதற்கு தேவையான பயிற்சிகளை பெறுவதற்காக லண்டன் செல்லப் போகிறார். ஒரு மாதம் அங்கு தங்கி பயிற்சி பெற்று விட்டு அவர் சென்னை திரும்பியதும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளது.