டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

இதுவரை ரொமாண்டிக், காமெடி மற்றும் பேமிலி சென்டிமெண்ட் படங்களில் நடித்து வந்த அசோக் செல்வன் தற்போது 'போர் தொழில்' என்ற படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுக்கிறார். இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வரும் நிலையில் தற்போது வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தப் படம் வருகிற ஜூன் மாதம் 9ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்குகிறார். அசோக் செல்வனுடன் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
“தொடர் கொலைகளை நிகழ்த்தும் குற்றவாளியை பிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு இளம் காவலரின் கதை. இளம் காவலராக அசோக் செல்வன் நடிக்கிறார். இதில் அசோக் செல்வன் மூத்த காவலர் ஒருவருடன் கூட்டணி அமைத்து புலனாய்வு செய்து குற்றவாளியை நெருங்குகிறார். அந்த மூத்த காவலர் சரத்குமார். ஆக்சன், சஸ்பென்ஸ் திரைக்கதையுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், தமிழ் திரையுலக ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று தனி முத்திரையைப் பதிக்கும்” என்கிறார் இயக்குனர் விக்னேஷ் ராஜா.