வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

ஆந்திர மாநிலம் கடப்பாவில் பிறந்து சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் விஸ்காம் படித்த ஸ்ருதி ரெட்டி, மாடல் அழகியாக வாழ்க்கையை துவக்கினார். பாண்டிராஜ் இயக்கிய 'மெரினா புரட்சி' என்ற படத்தில் பத்திரிகையாளராக நடித்தார். தற்போது அவர் 'விசாரணை கைதி' என்ற படத்தில் வழக்கறிஞராகவும், நட்டி நட்ராஜ் ஜோடியாகவும் நடித்து வருகிறார். இந்த படத்தில் அரசியல் தலைவர் ஒருவரின் படுகொலையில் சிக்கி கைதான விசாரணை கைதிக்கு ஆதரவாக வாதாடி அவரை காப்பாற்றும் வழக்கறிஞராக நடித்து வருகிறார்.
“சினிமா நடிகை ஆகும் கனவுடன்தான் சென்னையில் படித்தேன். சிறிய தேடலுக்கு பிறகு ‛மெரினா புரட்சி' வாய்ப்பு கிடைத்து. இந்த படத்தின் மூலம் மக்களுக்கு அறிமுகமானேன். என்றாலும் எனது நடிப்பு திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பை விசாரணை கைதி தந்துள்ளது. இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டது. இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும். தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குனர்களின் நடிகையாக நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே தனது கனவு” என்கிறார் ஸ்ருதி ரெட்டி.




