அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
ஆந்திர மாநிலம் கடப்பாவில் பிறந்து சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் விஸ்காம் படித்த ஸ்ருதி ரெட்டி, மாடல் அழகியாக வாழ்க்கையை துவக்கினார். பாண்டிராஜ் இயக்கிய 'மெரினா புரட்சி' என்ற படத்தில் பத்திரிகையாளராக நடித்தார். தற்போது அவர் 'விசாரணை கைதி' என்ற படத்தில் வழக்கறிஞராகவும், நட்டி நட்ராஜ் ஜோடியாகவும் நடித்து வருகிறார். இந்த படத்தில் அரசியல் தலைவர் ஒருவரின் படுகொலையில் சிக்கி கைதான விசாரணை கைதிக்கு ஆதரவாக வாதாடி அவரை காப்பாற்றும் வழக்கறிஞராக நடித்து வருகிறார்.
“சினிமா நடிகை ஆகும் கனவுடன்தான் சென்னையில் படித்தேன். சிறிய தேடலுக்கு பிறகு ‛மெரினா புரட்சி' வாய்ப்பு கிடைத்து. இந்த படத்தின் மூலம் மக்களுக்கு அறிமுகமானேன். என்றாலும் எனது நடிப்பு திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பை விசாரணை கைதி தந்துள்ளது. இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டது. இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும். தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குனர்களின் நடிகையாக நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே தனது கனவு” என்கிறார் ஸ்ருதி ரெட்டி.