அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கிடாரி படம் மூலம் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகை நிகிலா விமல். அதன்பிறகு தமிழில் சசிகுமாரின் வெற்றிவேல், கார்த்தியின் தம்பி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தார். தமிழில் அடுத்ததாக அவரது நடிப்பில் வாழி என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் மலையாளத்தில் அவர் நடித்த அயல்வாசி என்கிற திரைப்படம் வெளியானது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகிலா விமல் அளித்த ஒரு பேட்டியின் போது, கேரள மலபார் இஸ்லாமிய திருமணங்கள் குறித்து அவர் கூறுகையில், கண்ணூரில் நடக்கும் அது போன்ற திருமண நிகழ்வுகளில் அங்குள்ள பெண்கள், வீடுகளின் சமையலறை பக்கம் தான் உணவு பரிமாறுவார்கள் என்பது போன்று அவர் கூறியதாக செய்திகள் வெளியானது. அவரது இந்த பேச்சுக்கு பல பக்கம் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.
இது குறித்து நிகிலா விமல் கூறும்போது, “தற்போது வெளியாகி உள்ள செய்திகளில் கூறப்படுவது போல, எதையும் நான் சர்ச்சையாக கூறவில்லை. சொல்லப்போனால் எனது பேட்டியில் நான் கூறிய ஒரு கருத்தை திரித்து தவறாக வெளியிட்டுள்ளார்கள். அதனால் இது தொடர்பாக நான் யாருக்கும் விளக்கம் எதுவும் சொல்லப் போவதில்லை” என்று கூறியுள்ளார்.