பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? |
கடவுள் ராமர், சீதை மற்றும் ஹனுமன் குறித்து அவதூறு செய்து கவிதை வெளியிட்டதாக, இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது சென்னை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஆர்.கே புரத்தில் வானம் கலைத்திருவிழா என்ற நிகழ்ச்சியில் ‛மலக்குழு மரணம்' என்ற தலைப்பில், விடுதலை சிகப்பி என்பவர் கவிதை ஒன்றை வாசித்தார். அதில், கடவுள் ராமர், லட்சுமணர் மற்றும் ஹனுமனை அவதூறு செய்தும், இழிவுபடுத்தியும் கவிதை வாசித்தார். இது ஹிந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். பாரத் ஹிந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட சுரேஷ் மீது தொடர்பாக போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், புகாரின் அடிப்படையில், கலகத்தை தூண்டுதல், எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் விடுதலைசிகப்பி மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.