பழம்பெரும் பாடகி, நடிகை பாலசரஸ்வதி தேவி காலமானார் | நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு |
கடவுள் ராமர், சீதை மற்றும் ஹனுமன் குறித்து அவதூறு செய்து கவிதை வெளியிட்டதாக, இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது சென்னை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஆர்.கே புரத்தில் வானம் கலைத்திருவிழா என்ற நிகழ்ச்சியில் ‛மலக்குழு மரணம்' என்ற தலைப்பில், விடுதலை சிகப்பி என்பவர் கவிதை ஒன்றை வாசித்தார். அதில், கடவுள் ராமர், லட்சுமணர் மற்றும் ஹனுமனை அவதூறு செய்தும், இழிவுபடுத்தியும் கவிதை வாசித்தார். இது ஹிந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். பாரத் ஹிந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட சுரேஷ் மீது தொடர்பாக போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், புகாரின் அடிப்படையில், கலகத்தை தூண்டுதல், எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் விடுதலைசிகப்பி மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.