தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த எந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தற்போது நடிகர் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்துள்ளார். அதேபோல் நடிகர் சிரஞ்சீவி உடன் ‛போலா சங்கர்' படத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள் இடைவெளியில் திரைக்கு வருகிறது.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் தமன்னா அவர் கூறியது: "திரையுலகின் இரண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி இருவருடன் இணைந்து நான் நடித்துள்ள படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது சந்தோஷமாக உள்ளது. பெரும்பாலும் ஹீரோக்கள் நடித்த படங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாவது அடிக்கடி நடந்துள்ளது. ஆனால் கதாநாயகிகளுக்கு அரிதாக தான் நடக்கும். எனக்கு இப்போது இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழில் ரஜினி உடன் நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதியும், தெலுங்கில் சிரஞ்சீவி உடன் நடித்த போலா சங்கர் ஆகஸ்ட் 11ம் தேதியும் வெளியாக இருக்கிறது." என்று சந்தோஷமாக தெரிவித்துள்ளார்.