நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்து ‛ரங்கூன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயனின் 21வது படமாக உருவாகும் இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்று படக்குழுவினர் வீடியோ அறிவிப்புடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் சிவகார்த்திகேயன் படத்திற்கு முதல் முறையாக ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.