கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன் 2' படம் நேற்றே நாம் சொன்னபடி 200 கோடி வசூலைக் கடந்துள்ளது. படம் வெளியான நான்கே நாட்களில் 200 கோடி வசூல் என்பது சாதாரணமல்ல. முதல் பாகத்தைப் போலவே இந்தப் படத்தையும் ரசிகர்கள் குடும்பத்துடன் சென்று பார்த்து வருகிறார்கள்.
முதல் பாகம் அளவிற்குக் கலகலப்பாக, சுவாரசியமாக இல்லை என்று சிலர் சொன்னாலும், இரண்டாம் பாகத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ரசிகர்களிடம் இருப்பது தெரிகிறது. நேற்று வரை விடுமுறை நாள் என்பதால் வசூல் மழை பெய்திருக்கிறது.
இருப்பினும் கோடை விடுமுறை நாட்கள் என்பதால் வேறு எந்த பெரிய ஹீரோக்களின் படங்களும் வெளியாகவில்லை என்பதால் வசூல் தொடர்ந்து சிறப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் 32 நாட்களில் தான் 500 கோடி வசூலைத் தொட்டது.
அதைவிடக் குறைந்த நாட்களில் 'பொன்னியின் செல்வன் 2' 500 கோடி வசூலைத் தொடுமா என்பதே இப்போதைய கேள்வி. அது நடந்தால் தமிழ் சினிமாவில் ஒரு புதிய சாதனையாக அமையும்.