இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
நடிகர் விஜய் இப்போது 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து அவர் பாராட்டியுள்ளார். இது குறித்து விஜய் தரப்பில் விசாரித்தபோது, ‛திருச்சி, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், வடசென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர், ஏழைகளுக்குத் தினமும் விலையில்லா விருந்து வழங்கி வருகின்றனர்.
சில பகுதிகளில் காலை, மதியம் என 2 வேளை உணவு வழங்கி வருகின்றனர். நலத்திட்ட உதவிகள் செய்யும் மன்றத்தினரைப் பாராட்ட வேண்டும் என்று நடிகர் விஜய் முடிவு செய்தார். அதன்படி அவர்களைச் சென்னைக்கு அழைத்து நேற்று பாராட்டினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்' என்றனர்.