22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள பொரங்கி என்னும் பகுதியில் நடைபெற்ற என்.டி.ஆர்., நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்சினிமா மூலம் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எம்.ஜி.ஆர் அதே போல் ஆந்திரா மாநிலத்திலம் சினிமா மூலம் அரசியலலுக்கு வந்து முதல்வரானவர் நந்தமுரி தாரக்க ராமராவ் என்ற என்.டி.ராமராவ். தெலுங்கு சினிமா மட்டுமல்லாது தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனக்கென ரசிகர்களை கொண்டிருந்தார்.
கடந்த 1950 ம் ஆண்டில் சினிமாவில் நடிக்க துவங்கிய ராமராவ் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் கடவுள் வேடத்திற்கு பொருத்தமானவர் .
தொடர்ந்து அரசியலில் பங்கேற்ற ராமாராவ் தெலுங்கு தேசம் கட்சியை துவக்கினார். மேலும் மக்களை சந்திக்கும் வகையில் சுமார் 7,500 கி.மீ தொலைவிற்கு பயணம் செய்துள்ளார். இதற்காக பிரத்யேகமாக வாகனத்தை தயார் செய்தார். அதற்கு சைதன்யரதம் என்றும் பெயரிட்டார். 1986 ம் ஆண்டில் நடைபெற்ற ஆந்திரா சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 294 இடங்களில் 202 இடங்களை பெற்றார். தொடர்ச்சியாக மூன்று முறை மாநில முதல்வராக பதவி வகித்தார். சுதந்திரம் பெற்ற பின்னர் மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத முதல் முதல்வர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. எம்.ஜி.ஆர் மீது தனி பாசம் வைத்திருந்த என்.டி.ராமராவ் எம்.ஜி.ஆர். உடல்நல குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த போது அ.தி.மு.க..,விற்காக தமிழகத்தில் பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவரது நூற்றாண்டு விழா இன்று (28 ம் தேதி ) கொண்டாடப்பட்டது. விழாவில் நடிகர் ரஜினி, நடிகர் ராமராவின் மகன் பாலகிருஷ்ணா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவில் பங்கேற்ற சென்ற ரஜினியை விமான நிலையத்திற்கே வந்து அழைத்து சென்றார் பாலகிருஷ்ணா. இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.