50வது நாளில் 'டூரிஸ் பேமிலி' | பி.எம்.டபிள்யூ எக்ஸ்-1 காரை வாங்கிய நடிகர் விதார்த்! | தனி விமானம் வாங்கினாரா சின்னத்திரை நடிகை? | சூர்யா 45வது படத்தின் டைட்டில் 'கருப்பு': போஸ்டர் வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி! | கன்னடத்தில் அடி எடுத்து வைத்த 'அனிமல்' பட நடிகர் உபேந்திரா | 'தி ராஜா சாப்' டீசரை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஹைதராபாத் போக்குவரத்து போலீஸ் | அடுத்த தலைமுறைக்கு இதைத்தான் கொடுக்க போகிறோமா ? நடிகை மஞ்சிமா காட்டம் | மம்முட்டி நலமாக இருக்கிறார் ; ராஜ்யசபா எம்பி வெளியிட்ட தகவல் | அமீர்கான் படக்குழுவினரை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்திய ஷாருக்கான் | கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கிய காயத்ரி |
1994ம் ஆண்டு மிஸ் வேர்ல்டு பட்டம் வென்று, தன் அழகால் இந்தியாவை மட்டுமல்லாது உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஐஸ்வர்யா ராய். அதற்கடுத்து மூன்று வருடங்களில் 1997ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய 'இருவர்' தமிழ்ப் படம் மூலம் சினிமாவுலகில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் 'ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் 1, 2' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய மணிரத்னம் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளவர் ஐஸ்வர்யா ராய்.
அதை நேற்று மும்பையில் நடைபெற்ற 'பொன்னியின் செல்வன் 2' பத்திரிகையாளர் சந்திப்பிலும் நிரூபித்தார். நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் ஒருவர் மணிரத்னத்திடம், “ஐஸ்வர்யா ராய் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நடிகையா ?,” எனக் கேட்டார்.
அதற்கு மணிரத்னம், “திரைப்பட இயக்குனர்கள் மிகவும் சுயநலவாதிகள். அவர்களது படத்தைப் பற்றி கவனமாக இருப்பார்கள். நான் ஐஸ்வர்யாவை எவ்வளவு நேசித்தாலும், எனது படத்தில் உள்ள கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்தால் மட்டுமே அவரிடம் நடிக்கக் கேட்பேன். அவர் அதற்கு சரி என்று சொல்லிவிடுவார்,” எனப் புகழ்ந்து பேசினார்.
அதைக் கேட்டதுமே சில இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்த ஐஸ்வர்யா ராய், மணிரத்னத்திடம் வந்து அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று கட்டி அணைத்துக் கொண்டார்.
மும்பையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, ஷோபிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.