அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” |
நடிகர் கிச்சா சுதீப் கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தாலும் நான் ஈ படத்தின் மூலம் இவர் இந்திய முழுவதும் கவனம் பெரும் நடிகராக மாறியுள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த விக்ரந்த் ரோனா எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில் இயக்குனர் மற்றும் நடிகர் சேரனிடம் கிச்சா சுதீப் கதை கேட்டு பிடித்துள்ளதால் விரைவில் இந்த படத்தை தொடங்கலாம் என கூறியுள்ளாராம் சுதீப். சேரனும் இப்போது ஒரு வெப் சீரிஸ் இயக்கி வருகிறார். அதை முடித்த பின் இவர்கள் இணைவார்கள் என தெரிகிறது. இதற்கு முன்பு சேரனின் ஆட்டோகிராப் படத்தை கன்னட ரீமேக்கில் சுதீப் இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.