மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ் | பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது | ‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன் | பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? | 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் அட்டகாசம் | ‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? | வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி |
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் அயலான். ரகுல் பீர்த் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 24 ஏ.ம் நிறுவனம் மற்றும் கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் இருவரும் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பல வருட கிடப்பில் கிடந்த இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து இந்த படத்தின் தயாரிப்பாளர் கே.ஜி.ஆர் ராஜேஷ் அளித்த பேட்டியில், ‛‛இந்த படத்தில் வரும் அந்த ஏலியன் பொம்மைக்காக ரூ.2 கோடி செலவு செய்துள்ளோம். அதனுடைய அசைவு மட்டும் தான் கிராபிக்ஸ் செய்துள்ளோம். படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு அந்த ஏலியனையும் அழைத்து வருவோம்.
அயலான் படம் ‛ஈ.டி' என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் அல்ல. இந்த படத்தின் கதை முழுக்க வேறுப்பட்டு இருக்கும். இதற்கு முன்பு இந்திய சினிமாவில் 4000 வி.எப்.எக்ஸ் நிறைந்த காட்சிகள் கொண்ட திரைப்படம் பிரமஸ்தரா. ஆனால் அயலான் அதை விட அதிகமாக 4500 வி.எப்.எக்ஸ் காட்சிகள் நிறைந்த படமாக மாறியுள்ளது,'' என்று தெரிவித்துள்ளார்.