‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் அயலான். ரகுல் பீர்த் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 24 ஏ.ம் நிறுவனம் மற்றும் கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் இருவரும் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பல வருட கிடப்பில் கிடந்த இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து இந்த படத்தின் தயாரிப்பாளர் கே.ஜி.ஆர் ராஜேஷ் அளித்த பேட்டியில், ‛‛இந்த படத்தில் வரும் அந்த ஏலியன் பொம்மைக்காக ரூ.2 கோடி செலவு செய்துள்ளோம். அதனுடைய அசைவு மட்டும் தான் கிராபிக்ஸ் செய்துள்ளோம். படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு அந்த ஏலியனையும் அழைத்து வருவோம்.
அயலான் படம் ‛ஈ.டி' என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் அல்ல. இந்த படத்தின் கதை முழுக்க வேறுப்பட்டு இருக்கும். இதற்கு முன்பு இந்திய சினிமாவில் 4000 வி.எப்.எக்ஸ் நிறைந்த காட்சிகள் கொண்ட திரைப்படம் பிரமஸ்தரா. ஆனால் அயலான் அதை விட அதிகமாக 4500 வி.எப்.எக்ஸ் காட்சிகள் நிறைந்த படமாக மாறியுள்ளது,'' என்று தெரிவித்துள்ளார்.