ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் கடந்த வருடம் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகத்தில் பாடல்கள் ரசிக்க வைத்தாலும், மிகப் பெரும் வரவேற்பைப் பெறவில்லை என்பதே உண்மை. பழைய இசைக் கருவிகளைப் பயன்படுத்தியதாக ஏஆர் ரஹ்மான் சொல்லியிருந்தாலும் சில பாடல்கள் படத்துடன் ஒட்டவில்லை என்ற கருத்தே அதிகமாக இருந்தது. ஆனாலும், படத்தில் கொஞ்சமாக இடம் பெற்ற 'அலை கடலாய்' பாடல் அதிகமான ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.
இந்நிலையில் இம்மாதம் வெளியாக உள்ள 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்திற்கான பாடல்கள் 'ஸ்லோ பாய்சன்' ஆக ரசிகர்கள் மனதில் நுழைந்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த முதல் சிங்கிளான 'அக நக' லிரிக் வீடியோ சக்திஸ்ரீ கோபாலனின் இனிமையான குரலில் ரசிகர்களை வசீகரப்படுத்தியது. அப்பாடல் கார்த்தி, த்ரிஷா இடையிலான காதல் பாடலாக அமைந்தது.
அடுத்து நேற்று 'வீரா ராஜ வீர' லிரிக் வீடியோ வெளியாகியது. இப்பாடலை சங்கர் மகாதேவன், சித்ரா, ஹரிணி ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடல் ஜெயம் ரவி, சோபிதா துலிபலா இடையிலான காதல் பாடலாக உள்ளது. இரண்டு பாடல்களையும் பைந்தமிழ் வரிகளுடன் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார்.
இந்தப் பாடல்களைக் கேட்கும் போதுதான் படத்திற்கேயுரிய 'சரித்திர டச்'சை உணர முடிகிறது.