அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வித்தியாசமான கதைகளங்களில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் 1 படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. படத்தின் ரிலீஸ்க்கு முன்பே ரூ.70 கோடி வரை அவரது படத்திற்கு இப்போது பிஸினஸ் நடைபெறுகிறதாம். இதைதொடர்ந்து தனது சம்பளத்தையும் உயர்த்தி உள்ளாராம் ஜெயம் ரவி. பொன்னியின் செல்வன் 2ம் பாகத்திலே ரூ.25 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார். இனிவரும் படங்களிலும் இன்னும் சம்பளம் உயரும் என கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து அவர் நடிப்பில் இறைவன், சைரன் திரைப்படம் இந்த வருடமே வெளியாக உள்ளது. தற்போது இயக்குனர் எம்.ராஜேஷ் படத்திலும் நடித்து வருகிறார். ஜெயம் ரவி விரைவில் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் ரூ.100 கோடி பொருட்செலவில் உருவாக இருக்கிறது. இதையடுத்து அவர் அண்ணன் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திலும் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.