ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வித்தியாசமான கதைகளங்களில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் 1 படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. படத்தின் ரிலீஸ்க்கு முன்பே ரூ.70 கோடி வரை அவரது படத்திற்கு இப்போது பிஸினஸ் நடைபெறுகிறதாம். இதைதொடர்ந்து தனது சம்பளத்தையும் உயர்த்தி உள்ளாராம் ஜெயம் ரவி. பொன்னியின் செல்வன் 2ம் பாகத்திலே ரூ.25 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார். இனிவரும் படங்களிலும் இன்னும் சம்பளம் உயரும் என கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து அவர் நடிப்பில் இறைவன், சைரன் திரைப்படம் இந்த வருடமே வெளியாக உள்ளது. தற்போது இயக்குனர் எம்.ராஜேஷ் படத்திலும் நடித்து வருகிறார். ஜெயம் ரவி விரைவில் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் ரூ.100 கோடி பொருட்செலவில் உருவாக இருக்கிறது. இதையடுத்து அவர் அண்ணன் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திலும் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.